எறிகணை குண்டுகள் மீட்பு

மட்டக்களப்பு – குடும்பிமலைக்கு தெற்கே மயிலத்தமடு எனுமிடத்தில் இருந்து சக்திவாய்ந்த 81 ரக 16 எறிகணைக் குண்டுகள் நேற்று (12/12) மீட்கப்பட்டுள்ளன.

வாழைச்சேனை இராணுவப் புலனாய்வுப் பிரிவிற்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைவாக விசேட அதிரடிப்படையுடன் இணைந்து மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போதே இக்குண்டுகள் மீட்கப்பட்டுள்ளன.

அதற்கமைய குறித்த எறிகணை குண்டுகளை செயலிழக்கச் செய்யும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

எறிகணை குண்டுகள் மீட்பு

Social Share

Leave a Reply