2025 ஏப்ரல் மாதம் 26 ஆம் திகதியை தேசிய துக்க தினமாக பிரகடனப்படுத்த அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
மறைந்த பாப்பரசர் பிரான்சிஸின் இறுதிக்கிரியையை முன்னிட்டு தேசிய துக்க தினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
திருத்தந்தை பிரான்சிஸின் இறுதிக்கிரியை ஏப்ரல் 26 ஆம் திகதி காலை 10:00 மணிக்கு புனித பேதுரு பசிலிக்காவின் புனித பேதுரு சதுக்கத்தில் (St. Peter’s Square) நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.