உலகின் செல்வந்தரான எலன் மஸ்க் செயற்கை நுண்ணறிவு (AI) எதிர்காலத்தில் பல வேலைகளை மாற்றக்கூடும் என எச்சரித்துள்ளார்.
இதனால், எதிர்காலத்தில் மக்களுக்கு அரசுகள் வழக்கமான பண உதவிகளை தொடர்ந்தும் வழங்க வேண்டிய நிலை உருவாகலாம் என அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், ரோபோக்கள் குறைந்த செலவில் பொருட்களை அதிக அளவில் உற்பத்தி செய்யக்கூடியதாக இருப்பதால், பணவீக்கம் (inflation) ஏற்படாமல் தடுக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
AI தொழில்நுட்பத்தின் வேகமான வளர்ச்சி வேலைவாய்ப்புகளுக்கு பெரிய மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்பதையும், அதற்கேற்ப பொருளாதார கொள்கைகளும் மாற்றம் அடைய வேண்டிய அவசியம் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.