கொமன்வெல்த் தலைவர்கள் உச்சி மாநாடு (CHOGM) நிகழ்வுக்காக இறக்குமதி செய்யப்பட்டு பல ஆண்டுகளாக பயன்பாடின்றி இருந்த பேருந்துகள் தற்போது சீரமைக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்படுகின்றன என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் துணை அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.
இதுவரை 15 பேருந்துகள் முழுமையாக பழுது பார்க்கப்பட்டு சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், மீதமுள்ள பேருந்துகளை சீரமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாகவும் சமூக ஊடக பதிவொன்றின் மூலம் அவர் தெரிவித்துள்ளார்.
38 பேருந்துகளில், 18 பேருந்துகள் அடுத்த ஒரு மாதம் அல்லது சிறிது காலத்திற்குள் சேவைக்கு தயாராகும் என்றும், மீதமுள்ளவை இந்த ஆண்டின் இறுதிக்குள் சேவையில் இணைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
மேலும், சீரமைப்பு பணிகளை ஆதரிக்க அரசாங்கம் 30 புதிய இன்ஜின்களையும் 30 கியர்பாக்ஸ்களையும் கொள்முதல் செய்துள்ளதாகவும் இத்திட்டத்தின் முன்னேற்றத்தை மதிப்பீடு செய்வதற்கும், பணிகளில் ஈடுபட்டுள்ள பணியாளர்களின் தேவைகளை அறியவும் சம்பந்தப்பட்ட பணித்தளத்திற்குச் சென்றதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.