விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருந்த 50 வெளிநாட்டு நபர்கள் நேற்று (21.04) இலங்கை குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்களில் 47 சீனப் பிரஜைகள், 2 மலேசியர்கள் மற்றும் 1 இந்தியர் அடங்குவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் வர்த்தக விசா மூலம் நாட்டிற்குள் நுழைந்திருந்த போதிலும், விசா காலாவதியான பின்னரும் இலங்கையில் தங்கியிருந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு பகுதியில், குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை கட்டுப்பாட்டாளர் நாயகத்தின் அறிவுறுத்தலின் கீழ் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
கைது செய்யப்பட்டவர்கள் தற்போது வெலிசர பகுதியில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் விரைவில் தங்கள் சொந்த நாடுகளுக்கு நாடுகடத்தப்பட உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.