பேருந்தை பாகங்களாகப் பிரித்தோர் கைது

குற்றச் செயல்களுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளதென, சந்தேகிக்கப்படும் பேருந்து ஒன்றை பல பாகங்களாப் பிரித்த சந்தேக நபர்கள் மூவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட குறித்த நபர்கள் 39, 46, 53 வயதுடைய கொழும்பு 10 மற்றும் கொழும்பு 12 பகுதிகளை சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய, மருதானை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சங்கராஜ மாவத்தை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே மூவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களும் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட பொருட்களும் மேலதிக விசாரணைகளுக்காக மருதானை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

பேருந்தை பாகங்களாகப் பிரித்தோர் கைது
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version