பானுக்க முடிவை மாற்ற வேண்டும் – நாமல்

அண்மையில் சர்வதேசக் கிரிக்கெட் போட்டிகளிலிருந்து ஓய்வை அறிவித்த இலங்கை கிரிக்கெட் வீரர் பானுக்க ராஜபக்ஷ, தனது ஓய்வு முடிவினை மீள் பரிசீலனை செய்யவேண்டுமென விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ அவரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

தனது சொந்த காரணங்களுக்காக ஓய்வு பெறுவதாக பானுக்க அறிவித்துள்ள நிலையில், அவருக்கு இன்னமும் வயதுள்ளது. விளையாடுவதற்கான காலமுள்ளது. ஆகவே அவர்தனது முடிவினை மாற்றி கொள்ள வேண்டுமென தெரிவித்துள்ளார்.

விரும்பத்தகாத முடிவுகளை எடுப்பதிலும் பார்க்க சவால்களை எதிர்கொண்டு முன்னோக்கி செல்வதே சிறந்தது என தெரிவித்துள்ள அமைச்சர் நாமல் தனிப்பட்ட காரணங்களுக்காக விளையாட்டிலிந்து விலகிக்கொள்ள ஒவ்வொரு வீரருக்கும் உரிமையுண்டு. அந்த முடிவினை அவர்களே எடுக்க வேண்டும்..

ஆனால் முகாமைத்துவத்தில் சிக்கல்கள் அல்லது அநீதி நடைபெற்றதனால் அதனில் தலையிட்டு சீர்செய்ய வேண்டும். ஆனால் ஒருவருக்காக அல்லது சில வீரர்களுக்காக முழுமையான முகாமைத்துவ நடைமுறைகளையும் மாற்ற முடியாதென விளையாட்டு துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்தி

பானுக்க முடிவை மாற்ற வேண்டும் - நாமல்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version