வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று

வெலிக்கடை சிறைச்சாலையில், கடந்த 2012ஆம் ஆண்டு 8 கைதிகள் துப்பாக்கிச் சூட்டில் படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கின் தீர்ப்பு இன்று (12/01) அறிவிக்கப்படவுள்ளது.

குறித்த வழக்கின் தீர்ப்பு கடந்த 6ஆம்திகதி அறிவிக்கப்பட இருந்த நிலையில், தீர்ப்பு அறிவிப்பை இன்றுவரை பிற்போட கொழும்பு விசேட நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதி குழு அன்றைய தினத்தில் தீர்மானித்திருந்தது.

குறித்த வழக்கானது நீதியரசர்களான கிஹான் குலதுங்க, பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலக்கரத்ன ஆகியோர் அடங்கிய கொழும்பு மூவரடங்கிய விசேட நீதிமன்றில் கடந்த 6ஆம் திகதி அழைக்கப்பட்டிருந்தது.

இதன்போது. வழக்கின் தீர்ப்பை தயார்ப்படுத்த முடியாத காரணத்தினால், தீர்ப்பு அறிவிப்பை பிற்போடுவதாக, மூவரடங்கிய நீதியரசர்கள் குழாமின் தலைமை நீதியரசர் கிஹான் குலதுங்க தெரிவித்தார்.

வெலிக்கடை சிறைச்சாலை படுகொலை வழக்கின் தீர்ப்பு இன்று
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version