நால்வர் நீரில் மூழ்கினர்

சிறிபாகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ஶ்ரீ பாலபந்ததல பகுதியில் களு கங்கையில் நேற்று (15/01) நீராடிக் கொண்டிருந்த நால்வர் நீரில் மூழ்கியுள்ளனர்.

இந்நிலையில் அவர்களில் ஒருவர் உயிருடன் காப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் நீரில் மூழ்கிய இருவர் சடலங்களாக மீட்கப்பட்டுள்ளதுடன் 10 வயது சிறுவன் ஒருவன் காணாமல் போயுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அங்குராவதொட்ட பகுதியை சேர்ந்த 22 மற்றும் 40 வயதுடைய இருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

காணாமல் போன சிறுவனை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் சிறிபாகம பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

நால்வர் நீரில் மூழ்கினர்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version