மாடியில் இருந்து குதித்து வயோதிபர் தற்கொலை

கொழும்பு – வௌ்ளவத்தை பகுதியில் உள்ள அடுக்கு மாடி கட்டடம் ஒன்றின் 7 ஆவது மாடியில் இருந்து குதித்து நபர் ஒருவர் தற்கொலை செய்துள்ளார்.

நேற்று (15/01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

சம்பவத்தில் பலத்த காயமடைந்த நபர் களுபோவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

87 வயதுடைய ஒருவரே இவ்வாறு தற்கொலை செய்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பில் வௌ்ளவத்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

மாடியில் இருந்து குதித்து வயோதிபர் தற்கொலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version