ஜனாதிபதி, பிரதமரின் செயலாளர்கள் விரைவில் பொறுப்பேற்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்‌ஷ ஆகியோரின் புதிய செயலாளர்கள் இருவரும் விரைவில் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளனர்.

இதன்படி நீர்ப்பாசன அமைச்சின்செயலாளர் அனுர திஸாநாயக்க எதிர்வரும் 20ஆம் திகதி பிரதமரின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளதுடன், பிரதமரின் செயலாளர் காமினி செனரத் நாளைய தினம் (18/01) ஜனாதிபதியின் செயலாளராக கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

ஜனாதிபதியின் முன்னாள் செயலாளர் கலாநிதி பி.பி.ஜயசுந்தர கடந்த14 ஆம் திகதி தனது பதவியை இராஜினாமா செய்ததையடுத்து, ஏற்பட்ட வெற்றிடத்திற்கு காமினி செனரத் நியமிக்கப்பட்டார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதிவி வகித்த காலப்பகுதியில் ஜனாதிபதியின் அலுவலக தலைமை அதிகாரியாகவும் காமினி செனரத் கடமையாற்றியுள்ளார்.

இதேவேளை பிரதமரின் செயலாளராக நியமிக்கப்படவுள்ள அநுர திஸாநாயக்க, கல்வி அமைச்சு உட்பட பல்வேறு அமைச்சுகளின் செயலாளராக கடமையாற்றியுள்ளமை சுட்டிக்காட்டத்தக்கது.

ஜனாதிபதி, பிரதமரின் செயலாளர்கள் விரைவில் பொறுப்பேற்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version