கடந்த வருடம் டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்டிருந்த இந்திய மீனவர்கள் 13 பேருக்கும் விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
டிசம்பர் மாதம் 20ஆம் திகதி வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், ஊர்காவற்றுறை நீதிமன்றில் இன்று (18/01) மீளவும் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.
அதனை தொடர்ந்து, அவர்களை எதிர்வரும் மாதம் முதலாம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
