இன்றைய மழை வாநிலை

இன்று மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மற்றைய இடங்களில் மழையற்ற சீரான வாநிலை நிலவும்.

இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் வளிமண்டலவியல் திணைக்களத்தித்தினால் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

கொழும்பிலிருந்து காலி மற்றும் மாத்தறை ஊடாக ஹம்பாந்தோட்டை வரையான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புக்களில் சில இடங்களில் மாலை அல்லது இரவுவேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடியமழை பெய்யும் வாய்ப்புகளுள்ளன.

காற்று வடகிழக்கு திசையில் வீசும். வேகம் மணிக்கு 20-30 கி.மீ. மன்னாரிலிருந்து புத்தளம் ஊடான சிலாபம் மற்றும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையான கடற்பரப்;புக்களில் காற்றின் வேகமானது அவ்வப்போது மணித்தியாலத்திற்கு 40-50 கிலோமீற்றர் வரை அதிகரித்து வீசக்கூடும்.

மன்னாரிலிருந்து புத்தளம் சிலாபம் வரையிலும் ஹம்பாந்தோட்டையில் இருந்து பொத்துவில் வரையிலும் கடற்பரப்பு அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாக காணப்படும்.

நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடற்பரப்புக்கள் ஓரளவுக்கு காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

இன்றைய மழை வாநிலை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version