தனியார் மாகாண போக்குவரத்து நிறுத்தம்

மாகாணங்களுக்கிடையிலான தனியார் போக்குவரத்து சங்கம் தங்களுக்குரிய கட்டண உயர்வு கிடைக்காதமையினால் போக்குவரத்து சேவையிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளனர்.

தனியாக டீசல் கட்டணங்களை கருத்திற் கொண்டு விலையேற்றம் செய்யப்பட்டுள்ள நிலையில் அதனை தாம் ஏற்றுக் கொள்ளமுடியாதென குறித்த சங்கம் தெரிவித்துள்ளது.

15 சதவீத அதிகரிப்பு மாகாண பயணிகள் போக்குவரத்துக்கு போதாது எனவும், டயர்,ட்ரியூப், ஒயில் போன்ற அனைத்தும் 35 சதவீத அதிகரிப்பினை கொண்டுள்ளதாகவும், ஆகவே இந்த 15 சதவீத அதிகரிப்பு தமக்கு போதாது எனவும் குறித்த சங்கத்தின் தலைவர் விஜித குமார தெரிவித்துள்ளார்.

இந்த விலையேற்றம் தொடர்பில் திருத்தங்கள் செய்யப்பட்டு அதிகரிக்கப்பட்டால் மட்டுமே தாம் இந்த விலையேற்றத்தை ஏற்றுக்கொள்வோம் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதன் காரணமாக உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தாம் மாகாண போக்குவரத்து சேவையினை இடை நிறுத்துவதாக தெரிவித்துள்ளார்.

தனியார் மாகாண போக்குவரத்து நிறுத்தம்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version