வரிசை விரைவில் முடிவு-ஜனாதிபதி ஆளும்கட்சி சந்திப்பு

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷமற்றும் ஆளும் பொதுஜன பெரமுன கட்சியின் பங்காளி கட்சிகளது உறுப்பினர்களுக்கிடையில் நேற்று மாலை சந்திப்பு இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போது வீழ்ச்சியிலிருந்து நாட்டை மீட்டெடுப்பது தொடர்பாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

இதன் போது நாட்டில் ஏற்பட்டுள்ள மிக முக்கிய பிரச்சினையான மக்கள் வரிசையில் நிற்பதனை முடிவுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைளை எடுக்க வேண்டுமென்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள சகல பிரச்சினைகளையும் உடனடியாக முடிவுக்கு கொண்டுவரமுடியாது. ஆனால் மக்களின் உடனடி பிரச்சினைகளை தீர்க்க நடவடிக்கை எடுத்தல் தொடர்பில் பேசப்பட்டுள்ளது.

அலரி மாய்கையில் 3 மணித்தியாலங்களுக்கு மேலாக நடைபெற்ற இந்தக் கூட்டத்தில் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவின் அண்மைக்கால நடவடிக்கைகளுக்கு பாராட்டு வழங்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மக்களினதும் நாட்டினதும் பிரச்சினைகளை தீர்க்க அனைவரும் இணைந்து செயற்படவேண்டுமென்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது.

வரிசை விரைவில் முடிவு-ஜனாதிபதி ஆளும்கட்சி சந்திப்பு
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version