பிள்ளையானுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்

மட்டக்களப்பில் பாராளுமன்ற உறுப்பினர் சந்திரகாந்தனது (பிள்ளையான்) அலுவலகம். பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் கூட்டத்தினால் முற்றுகையிடப்பட்டுள்ளது.

நடைபெற்றுக்கொண்டுள்ள போராட்டம் தொடர்பில் “வெடித்தது மாபெரும் அரச எதிர்ப்பு போராட்டம் மட்டக்களப்பில். அரச பாராளுமன்ற உறுப்பினர் பிள்ளையான் அவர்களின் அலுவலகம் மற்றும் வீடு எம்மாலும் ஆர்ப்பாட்ட குழுவினராலும் இன்றைய தினம் முற்றுகை” என பாராளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.

“அபிவிருத்தி என்னும் பெயரில் மக்களை சுரண்டி இவ் நிலைக்கு மக்களை கொண்டுவந்தவர்கள் துரத்தப்பட வேண்டும். மக்கள் தற்பொழுது அனைத்தையும் உணர்ந்துள்ளார்கள்.
இப்போராட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள் உறுப்பினர்கள் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் பொதுமக்கள் பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்து இருந்தார்கள்” எனவும் சாணக்கியன் மேலும் தெரிவித்துள்ளார்.

பிள்ளையானுக்கு எதிராக மட்டக்களப்பில் போராட்டம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version