ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தேசிய பட்டியல் மூலமாக பாராளுமன்றதுக்கு தெரிவு செய்யப்பட்ட இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவனின் கட்சி பதவிகளை ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி நீக்கியுள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் உப செயலாளர், வன்னி மாவட்ட தலைவர் மற்றும் சர்வதேச செயலாளர் போன்ற பதவிகளிலிருந்து நீக்கப்பட்டுள்ளார்.
இதற்கான கடிதத்தை கட்சியின் செயலாளர் தயாசிறி ஜயசேகர அனுப்பி வைத்துள்ள அதேவேளை, அவர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையும் எடுக்கப்படவுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று(18.04) ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவினால் வழங்கப்பட்ட இராஜாங்க அமைச்சு பதவியினை கட்சியின் முடிவினை மீறி பெற்றுக்கொண்டமைக்காவும், ஆளும் பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கியமைக்காகவும், இந்த முடிவினை ஸ்ரீலங்கா சுதந்திர எடுத்துள்ளது.