பாடசாலைகளுக்கு விடுமுறை

சகல பாடலைகளுக்குமான முதலாம் தவணை விடுமுறை இன்று முதல் ஆரம்பித்துள்ளது. மீண்டும் இரண்டாம் தவணைக்காக ஜூன் 06 ஆம் திகதி பாடசாலைகள் ஆரம்பிக்கவுள்ளன.

நாளைய தினம் முதலே விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. பெற்றோல் தட்டுப்பாடு காரணமாக அரச ஊழியர்கள் நாளைக்கு கடமைக்கு வரத்தேவையில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.

முதலில் இன்று காலை, நாளைய தினமே விடுமுறை என கல்வியமைச்சு அறிவித்திருந்த போதும் மாலை வேளையில் முடிவினை மாற்றி பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை என சுற்று நிரூபம் மூலம் அறிவித்துள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version