எரிபொருள் பதுக்கிய நிறுவனத்தை தேடிப் பிடித்த அதிகாரிகள்

மன்னார்-மதவாச்சி பிரதான வீதி, திருக்கேதீஸ்வரம் சந்தியில் அமைந்துள்ள லங்கா எரிபொருள் விற்பனை நிலையத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த பெட்ரோல் மற்றும் டீசல் ஆகிய எரிபொருட்கள் மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகளினால் கண்டு பிடிக்கப்பட்டு நேற்று வியாழக்கிழமை (16.06) இரவு மக்களுக்கு வினியோகிக்கப்பட்டுள்ளது.

மக்களிடம் இருந்து கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டிற்கு அமைவாக மன்னார் மாவட்டச் செயலக பாவனையாளர் அதிகார சபை அதிகாரிகள் நேற்று வியாழக்கிழமை (16.06) இரவு குறித்த எரிபொருள் விற்பனை நிலையத்தில் திடீர் சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு சோதனைகளை மேற்கொண் போது பெட்ரோல், டீசல் மற்றும் சுப்பர் பெட்ரோல் பதுக்கி வைக்கப் பட்டுள்ளமை கண்டு பிடிக்கப்பட்டது.

இதன் போது 2 ஆயிரத்து 47 லீற்றர் பெட்ரோல் 3 ஆயிரத்து 153 லீற்றர் டீசல் மற்றும் 3 ஆயிரத்து 196 லிட்டர் சுப்பர் பெட்ரோல் ஆகியவை பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் குறித்த எரிபொருட்கள் இராணுவம் மற்றும் பொலிஸாரின் உதவியுடன் உடனடியாக மக்களுக்கு வினியோகிக்கப்பட்டது.

இந்த பெட்ரோல் நிலையத்தில் பெட்ரோல் இருத்தும் விநியோகிக்கப்படவில்லை என மக்கள் தெரிவிப்பதாக எமது செய்தியில் தெரிவித்திருந்தோம். இது தொடர்பாக இலங்கை பெட்ரோலிய வட மாகாண மேற்பார்வையாளரை தொடர்பு கொண்டு கேட்ட போது “95 ரக பெட்ரோல் மட்டும் அத்தியாவசிய சேவைகளுக்காக சிறிதளவு கையிருப்பில் இருப்பதாகவும், ஏனைய எரிபொருட்கள் இயந்திரத்தினால் இழுக்குமளவுக்கு இல்லை” என எரிபொருள் நிரப்பு நிலையத்தினர் கூறியதாக எமக்கு தெரிவித்திருந்தார்.

எரிபொருள் பதுக்கிய நிறுவனத்தை தேடிப் பிடித்த அதிகாரிகள்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version