நாடு திரும்பும் கோட்டா?

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எதிர்வரும் 24 ஆம் திகதி நாடு திரும்பவுள்ளதாக ரஸ்சியாவுக்கான முன்னாள் தூதுவர் உதயங்க வீரதுங்க ஊடங்களுக்கு தெரிவித்துள்ளார்.

தாய்லாந்துக்கு கடந்த 11 ஆம் திகதி சிங்கப்பூரிலிருந்து சென்ற முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மூன்று மாதங்கள் அங்கு தங்குவதற்கான விசா வழங்கப்பட்டுள்ளது. எனினும் அவர் அங்கு வெளியே செல்ல முடியாத நிலையில் ஹோட்டலில் தங்கியுள்ளார் என அங்கிருந்து வெளியாகிய செய்திகள் உறுதிப்படுத்தியுள்ளன.

இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் யுக்ரைனிடமிருந்து கொள்வனவு செய்யப்பட்ட மிக் 27 ரக போர் விமானம் தொடர்பிலான விசாரணைக்கு அறிக்கை வழங்குவதற்காக சென்றுவிட்டு திரும்புவம் வேளையிலேயே இந்த தகவலை கூறியுள்ளார்.

குறித்த விமான கொள்வனவில் நிதி மோசடி இடம்பெற்றதாக குற்றம் சுமத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வருகின்றன. இந்த கொள்வனவு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் காலத்தில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பாதுகாப்பு அமைச்சின் செயலாளராக கடமையாற்றிய காலத்தில் நடைபெற்றுள்ளது. உதயங்க வீரதுங்க 2006 ஆம் ஆண்டு முதல் மஹிந்த ராஜபக்ஷ ஜனாதிபதி தேர்தலில் தோற்கடிக்கப்படும் வரை ரஸ்சியாவுக்கான தூதுவராக கடமையாற்றியுள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version