இலங்கைக்கு எரிபொருள் வழங்க ஜப்பான் இணக்கம்!

இலங்கையில் அத்தியாவசிய மற்றும் அவசரகால சுகாதார சேவைகளை தடையின்றி மேற்கொள்வதற்கு தேவையான எரிபொருளை, கொள்வனவு செய்வதற்கு 38 மில்லியன் அமெரிக்க டொலர்களை இலங்கைக்கு வழங்க ஜப்பான் அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளது.

ஜப்பானின் பொருளாதார மற்றும் சமூக அபிவிருத்தி வேலைத்திட்டத்தின் கீழ் இந்த நிதி வழங்கப்படுவதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் பந்துல குணவர்தன ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளார்.

மேலும், ஜப்பானிய அரசாங்கத்துடன் இது தொடர்பான ஒப்பந்தத்தில் கைச்சாத்திடுவதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு நிதியமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியினால் பிரேரணை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அதற்கு அமைச்சரவை அங்கீகாரம் கிடைத்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கு எரிபொருள் வழங்க ஜப்பான் இணக்கம்!
https://www.facebook.com/101424405897210/photos/a.195486213157695/195485669824416/
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version