அரசாங்கத்தை கவிழ்க்க சதிமுயற்சி!

பாராளுமன்றில் நடைபெறவுள்ள முக்கிய வாக்கெடுப்பின்போது அரசாங்கத்தை கவிழ்க்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட அரசியல்வாதியொருவர் திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவி வழங்கப்படாது என அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ள நிலையில், சிங்கள ஊடகம் ஒன்று குறித்த தகவலை வெளியிட்டுள்ளது.

அமைச்சுப் பதவிகளை கோரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்களுக்கு தனியான குழுவொன்றை அமைத்து பொறுப்புக்களை வழங்க அரசாங்கம் முன்வந்துள்ளபோதிலும் அவர்கள் அந்த பதவிகளை ஏற்கவில்லை எனவும் தெரியவருகிறது.

தாழ்ந்த பதவிகளை ஏற்க விரும்பவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சிரேஷ்ட உறுப்பினர்கள் தெரிவித்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version