இலங்கையில் உள்ள நோர்வே தூதரகம் இன்று (31.07) முதல் மூடப்படவுள்ளது.
வெளிநாட்டு தூதரகப் பணிகளின் வலையமைப்பில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு மாற்றங்கள் காரணமாக இந்த நடவடிக்கை எடுக்கப்படும் என நோர்வே அரசாங்கம் அண்மையில் அறிவித்திருந்தது.
எனவே, கொழும்பில் உள்ள நோர்வே தூதரகத்தின் சேவைகள் அனைத்தும் இன்று (31.07) முதல் நிறுத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான இருதரப்பு உறவுகளுக்குத் தேவையான செயற்பாடுகளை இந்தியாவின் புதுடில்லியில் உள்ள நோர்வே தூதரகம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
ஸ்லோவாக்கியா, கொசோவோ, மடகஸ்கர் போன்ற நாடுகளின் அரசாங்கங்களின் கீழ் அமைந்துள்ள தூதரகங்களும் இந்த ஆண்டு முதல் இடைநிறுத்தப்படும் என நோர்வே அரசாங்கம் மேலும் அறிவித்துள்ளது.