இலங்கை, தென்னாபிரிக்க தொடர் இன்று ஆரம்பம்

இலங்கை, தென்னாபிரிக்கா கிரிக்கெட் அணிகளுக்கிடையிலான ஒரு நாள் சர்வதேச கிரிக்கெட் போட்டி தொடர் இன்று(02.09.2021) கொழும்பு ஆர்.பிரேமதாச கிரிக்கெட் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது. இந்தியா கிரிக்கெட் அணியுடனான தொடர், அண்மையில் இலங்கையில் நிறைவடைந்த 20-20 தொடர் ஆகியவற்றிலிருந்து இலங்கை வீரர்கள் இந்த தொடருக்காக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள். கடந்த இந்தியா தொடரில் விளையாடிய வீரர்களில் பிரகாசித்த வீரர்கள் மீண்டும் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். தினேஷ் சந்திமால், நுவான் பிரதீப் ஆகிய சிரேஸ்ட வீரர்கள் அணிக்குள் மீண்டும் அழைக்கப்பட்டுள்ள நிலையில் இன்றைய தினம் அவர்கள் விளையாடும் சாத்தியங்கள் குறைவாக காணப்படுகின்றன. இருப்பினும் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சில் இரண்டாம் பந்துவீச்சாளர் ஒருவர் இன்னமும் சரியாக இனம் காணப்படாத நிலையில், இந்த தொடரில் அந்த பந்து வீச்சாளரை இனம் காணவேண்டும் என்ற நிலை காணபப்டுகிறது. தென்னாபிரிக்கா அணி தனது முக்கிய வீரர்கள் சிலருக்கு ஓய்வினை வழங்கியே இலங்கைக்கு வந்துளார்கள். எனவே தனது வளர்ச்சிக்கு முயற்சிக்கும் இலங்கை அணி தன்னை சரியாக தயார்படுத்த இந்த அணியோடு விளையாடுவது இலங்கைக்கு நம்பிக்கையினை தரும். தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சு பலமாக காணபப்டுகிறது. இது இலங்கை அணியின் துடுப்பாட்ட வீரர்களுக்கு சவாலாக அமையப் போகிறது.அதனை சரியாக எதிர்கொண்டால் இலங்கை அணி வெற்றி நோக்கி பயணிக்க கூடிய நிலை உருவாகும்.

இலங்கை, தென்னாபிரிக்க தொடர் இன்று ஆரம்பம்
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version