அமெரிக்க தூதுவர் நாடு செல்கிறார்

தன்னுடைய சேவைக் காலத்தை நிறைவு செய்துகொண்டு நாடு திரும்பவுள்ள இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் அலெய்னா பீ.டெப்லிட்ஸ் (Alaina B. Teplitz), ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவினை இன்று(28/10) சந்தித்துள்ளார்.

அமெரிக்காவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ஒத்துழைப்புகளை அதிகரித்துக் கொள்வதற்காக அலெய்னா வழங்கிய ஒத்துழைப்புகளைப் பாராட்டிய ஜனாதிபதி , கொவிட் தொற்றுப் பரவலைத் தடுப்பதற்கான தடுப்பூசி ஏற்றல், மருத்துவ உபகரணங்களை விநியோகித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா வழங்கிய உதவிகளுக்கும், ஜனாதிபதி நன்றி தெரிவித்தார் என ஜனாதிபதி ஊடக பிரிவு அறிவித்துள்ளது.
.
தடுப்பூசி ஏற்றல் மற்றும் கொவிட் தொற்றொழிப்புச் செயற்பாடுகளில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றங்களுக்கு மகிழ்ச்சி தெரிவித்த தூதுவர், தனது சேவையைச் சிறப்பாக முன்னெடுக்க இலங்கையிலிருந்து கிடைக்கப்பெற்ற ஒத்துழைப்புக்காக, ஜனாதிபதி அவர்களுக்கு அவர் தலைமையிலான அரசாங்கத்துக்கும் நன்றி தெரிவித்ததாகவும் ஜனாதிபதி ஊடக பிரிவு மேலும் தெரிவித்துள்ளது.

அமெரிக்க தூதுவர் நாடு செல்கிறார்
Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version