KTP Consultancy & Training நிறுவனத்தின் தொழில்முறைப் பயிற்சி யாழில் முன்னெடுப்பு!

யாழ். வடமராட்சி கல்வி வலயத்திற்கான KTP Consultancy & Training நிறுவனத்தின் தொழில்முறைப் பயிற்சிகள் அந்நிறுவனத்தின் நிறுவுனரும், பெருநிறுவனப் பயிற்றுவிப்பாளருமான துரைராஜா பிரஷாந்தனால், யாழ்.கரவெட்டி விக்னேஸ்வரக் கல்லூரியில் நேற்று (14.08) முன்னெடுக்கப்பட்டது.

“வெற்றிக்கான மென் திறன்கள்” (Soft Skills for Success – S3) எனும் தலைப்பில் தரம் 9 – 13 மாணவர்களுக்கும் , “சிறந்த பெறுபேறுகளுக்கான குழு முயற்சி” ( Team Effort for Better Results – TEBR) எனும் தலைப்பில் ஆசிரியர்களுக்கும் பங்குபற்றல் அணுகுமுறையில் (Participatory Approach) சுய ஊக்குவிப்புப் பயிற்சிகளை அவர் இதன்போது நடத்தினார்.

சிறப்பான தொடக்க நிறைவு உரைகளை ஆற்றி சகல ஒத்துழைப்புக்களையும் வழங்கிய கல்லூரியின் அதிபர் பொன்னையா அரவிந்தன் உள்ளிட்ட அனைவருக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார்.

KTP Consultancy & Training நிறுவனத்தின் தொழில்முறைப் பயிற்சி யாழில் முன்னெடுப்பு!
Social Share
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version