யாழ்ப்பாண மாவட்ட கூட்டுறவு சபை 101 ஆவது சர்வதேச கூட்டுறவு தின விழாவை கொண்டாடும் நிகழ்வு இடம்பெற்றுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் யாழ் மாவட்ட ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.
யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் இன்று (24.08) காலை இடம்பெற்ற இந்நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சார்ள்ஸ் பிரதம விருந்தினராக கலந்து கொண்டுள்ளதுடன், போட்டிகள் நடாத்தப்பட்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு இதன்போது வடக்கு மாகாண ஆளுநரால் பரிசில் மற்றும் சான்றிதழ் வழங்கி வைக்கப்பட்டது.
