வவுனியாவில் திடீரென மாயமான சிறுமியின் சடலம்!

வவுனியா நெளுக்குளம் பகுதியில் நீர்தொட்டியில் விழுந்து உயிரிழந்த சிறுமியின் சடலம்  திடீரென மாயமாகியுள்ளது.

கடந்த மாதத்தில் வவுனியா நெளுக்கும் பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவர் நீர்த் தொட்டியில் விழுந்து உயிரிழந்தார். இதனையடுத்து மரண விசாரணைகள் மேற்கொள்ளப்பட்ட நிலையில், சடலம் உறவினர்களிடம் கையளிக்கப்பட்டது.

உறவினர்கள் இராசேந்திர குளம் பகுதியில் உள்ள மயானத்தில உடலை புதைத்துள்ளனர். இந்நிலையில் தற்போது சிறுமியின் சடலம்  இனந்தெரியாத நபர்களால் தோண்டி எடுக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் குறித்து தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

வவுனியாவில் திடீரென மாயமான சிறுமியின் சடலம்!
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version