நானுஓயாவில் ஆணொருவரின் சடலம் மீட்பு!

 

நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிலாரண்டன் பகுதியில் நேற்று (08.09) காணாமல்போன ஆண் ஒருவரின் சடலம் இன்று(09.09) அப்பகுதியில் உள்ள சிறிய நீரோடையில் இருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளது.

நானுஓயா கிலாரண்டன் கீழ் பிரிவைச் சேர்ந்த நான்கு பிள்ளைகளின் தந்தையான சித்திரபாலன் மகேஸ்வரன்(49) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

நீரோடையில் ஆணொருவரின் சடலமொன்று இருப்பதாக பொலிஸாருக்கு கிடைத்த தகவலை அடுத்து பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர்.

மரண விசாரணைகளின் பின் சடலம் வைத்திய பரிசோதனைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது கொலையா? தற்கொலையா? என்பது தொடர்பில் நானுஓயா பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version