போலந்து நாட்டிற்கான போலி விசாவுடன் சிக்கிய இளைஞன்!

போலி போலந்து வதிவிட விசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயற்சித்த 23 வயதான இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று மாலை 6.40 அளவில் கட்டார் நாட்டின் தோஹா நோக்கி புறப்பட்டுச் செல்லவிருந்த ஸ்ரீலங்கன் விமானத்தில் ஏறுவதற்காக குறித்த இளைஞன் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்திருந்த வேளையிலே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

பயணித்திற்காக அவர் சமர்ப்பித்த ஆவணங்கள் மீது ஏற்பட்ட சந்தேகம் காரணமாக அவர் குடிவரவு, குடியகல்வு பிரிவின் அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் அவர் வைத்திருந்த போலாந்து விசா போலியானது என கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இவர் 40 லட்சம் ரூபா பணத்தை தரகர் ஒருவருக்கு வழங்கி இந்த போலி விசாவை பெற்றுக்கொண்டதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட குறித்த இளைஞன் நீர்கொழும்பு பிரதேசத்தை சேர்ந்தவர் என கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version