எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, அங்கு நான் மக்களுக்காக நிற்பேன்!

மக்களுக்கு எங்கெல்லாம் அநீதி இழைக்கப்படுகிறதோ, நான் அங்கு அவர்களுக்காக துணை நிற்பேன் என அமைச்சர் ஜீவன் தொண்டமான் தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரி – கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தின் வெள்ளந்துரை தோட்ட முகாமைத்துவத்தின் தாக்குதலின் காரணமாக அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த வீடு தகர்க்கப்பட்டது.

மேலும் சம்பவம் குறித்து அறிந்ததும், குறித்த பகுதிக்கு விரைந்து சென்ற ஜீவன் தொண்டமான், கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்திற்கு கடுமையாக எச்சரிக்கை விடுத்ததுடன், இந்த நடவடிக்கை தொடர்பாக பெருந்தோட்டத்துறை அமைச்சர் ரமேஷ் பத்திரணவின் கவனத்திற்கு உடன் கொண்டுவந்துள்ளார்.

மனிதாபிமானமற்ற முறையில் நடந்துக் கொண்ட தோட்ட முகாமைத்துவத்தை வன்மையாக கண்டிப்பதாகவும், உடனடியாக அவர்களுக்கு வீட்டை பெற்றுத்தரவும், பல்கலைக்கழகத்தில் கல்வி பயில உள்ள மாணவிக்கு முழுமையான புலமைபரிசில் வழங்கவும், அவர்களின் குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு கஹவத்தை பெருந்தோட்டயாக்கத்தில் அதிகாரியாக நியமனம் ஒன்று வழங்கவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

இதற்கு இணங்கிய பெருந்தோட்டயாக்கம், அவர்களுக்கு உடன் தீர்வை பெற்றுக்கொடுக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மேலும், இவ்வாண்டு வரவு செலவு திட்டத்திற்கு பின் இரத்தினபுரி மாவட்டத்திற்கு அதிகப்படியான வீடுகளை அமைப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்திற்கு ஆலோசனை வழங்கியுள்ளதாகவும், குறித்த தோட்டத்திற்கு மாதிரி கிராமம் ஒன்றை உருவாக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஆலோசனை வழங்கியதாகவும் தெரிவித்துள்ளார்.

ஜீவன் தொண்டமானின் குறித்த விஜயத்தின்போது, இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் உப தலைவர் ராஜமணி, இரத்தினபுரி மாவட்ட அமைப்பாளர் ரூபன் பெருமாள், முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் நிரஞ்சன் குமார், அமைப்பாளர்கள், கட்சி முக்கியஸ்தர்கள், பெருந்தோட்ட மனிதவள அபிவிருத்தி நிதியத்தின் அதிகாரிகள் என பலரும் உடன் இருந்துள்ளனர்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version