மண்சரிவில் மேலும் இருவர் சிக்கினர்

கேகாலை – கலிகமுவ – ஹத்னாகொட பிரதேசத்தில் இன்று அதிகாலையில் பாரிய மண்சரிவு ஏற்பட்டுள்ளது.

குறித்த மண்சரிவில் வீடொன்று முழுமையாக புதையுண்டதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாய், தந்தை மற்றும் மகன் ஆகிய மூவர் காணாமற்போயுள்ளனர்.

இந்நிலையில் காணாமற்போன மூவரில் தாய் மட்டும் கடின முயற்சிகளின் பின்னர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை நாட்டில் 10 மாவட்டங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த மண்சரிவு அபாய எச்சரிக்கை, முன்னர் அறிவித்திருந்ததன்படி இன்று பிற்பகல் வரை நீடிக்கிறது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version