இலங்கை, பங்களாதேஷ் போட்டி ஆரம்பம்

இலங்கை, பங்களாதேஷ் போட்டி ஆரம்பம்

இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளுக்கிடையிலான உலகக்கிண்ண தொடரின் 38 ஆவது போட்டி இன்று ஆரம்பித்துள்ளது.

டெல்லி அருண்ஜெட்லீ மைதானாத்தில் ஆரம்பித்துள்ள போட்டியில் இலங்கை பங்களாதேஷ் அணி களத்தடுப்பை துடுப்பாட்டத்தை தெரிவு செய்துள்ளது.

இந்த உலகக்கிண்ண தொடரில் எட்டு இடங்களுக்குள் வரும் அணிகள் சம்பியன் கிண்ணப் போட்டிகளில் விளையாடத் தகுதி பெறும். ஆகையால் இரு அணிகளும் அதனை குறிவைத்து இன்றைய போட்டியில் வெற்றி பெற இரு அணிகளும் போராடும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கை அணி ஏழாமிடத்தில் காணப்படுகின்றது. இன்று வெற்றி பெற்றால் ஏழாமிடம் தொடரும். பங்களாதேஷ் அணி வெற்றி பெற்றால் ஏழாமிடம் வரை முன்னேறும் வாய்ப்பு கிடைக்கலாம்.

இரு அணிகளும் உலகக்கிண்ண தொடரின் அரை இறுதி வாய்ப்புக்களை இழந்துள்ளன.

அணி விபரம்

இலங்கை அணி: குஷல் மென்டிஸ்(தலைவர்), குஷல் பெரேரா , பத்தும் நிஸ்ஸங்க, சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க, அஞ்சலோ மத்தியூஸ், தனஞ்சய டி சில்வா, மஹீஸ் தீக்ஷண, டில்ஷான் மதுஷங்க, துஷ்மந்த சமீர, கஸூன் ரஜித

பங்காளதேஷ் அணி: ஷகிப் அல் ஹசன்(தலைவர்), நஜ்முல் ஹொசைன் சாண்டோ, லிட்டொன் டாஸ், தௌஹித் ரிடோய் , ரன்ஷித் ஹசன், முஷ்பிகுர் ரஹீம், மெஹிதி ஹசன் மிராஸ், மஹ்மதுல்லா, தஸ்கின் அஹமட், முஸ்ரபைசூர் ரஹ்மான், ஷொரிபுல் இஸ்லாம்

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version