ஸ்ரீலங்கா கிரிக்கெட் மீதான சர்வதேசக் கிரிக்கட் பேரவையின் தடை தொடர்பில் ஆராய்ந்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஸ்ரீலங்கா கிரிக்கெட் விவாரகம் தொடர்பில் நியமிக்கப்பட்ட அமச்சரவை உப குழு தலைவர் அலி சப்ரியிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இனி வரும் காலங்களில் இடைக்கால நிர்வாகசபையினை நியமிப்பதாக இருந்தால் அமைச்சரவை அனுமதி பெறப்படவேண்டுமென முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகும் மேலும் தகவல் வெளியாகியுள்ளது.