இன்றும் இடியுடன் கூடிய மழை!

சப்ரகமுவ, மத்திய மற்றும் மேல் மாகாணங்களிலும் புத்தளம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் இன்று (25.11) பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்திலும் ஓரளவு மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மக்கள் பாதுகாப்பாக செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Social Share

Leave a Reply