‘பொலிஸார் பொதுமக்களை பாதுகாக்கின்றனர்’ – சரத் வீரசேகர

பொலிஸார் பொதுமக்களை கொவிட் வைரஸிலிருந்து பாதுகாப்பதற்காகவே முயற்சி செய்கின்றனர் என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இன்று (16/11) பாராளுமன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.

அவர் தொடர்ந்துரைக்கையில், ”பொலிஸார் பொதுமக்களை பாதுகாக்கும் ஒரேயொரு நோக்கில் மட்டுமே சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய வெளியிட்டப்பட்ட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம் செயற்பட்டு வருகின்றனர். அவர்கள் கொவிட் வைரஸூக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டத்திற்கு உதவி புரிகின்றனர்.

எப்படியிருப்பினும் எதிர்க்கட்சியினர் கொவிட் வைரஸை பரப்பி அரசாங்கத்தையும் மக்களையும் அழிக்கும் செயற்பாடுகளிலே ஈடுபடுகின்றனர்” என்றார்.

'பொலிஸார் பொதுமக்களை பாதுகாக்கின்றனர்' - சரத் வீரசேகர
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version