கொழும்பிற்கு செல்வோருக்கான மகிழ்ச்சி செய்தி..!

நத்தார் பண்டிகையை முன்னிட்டு சொந்த இடங்களுக்குச் சென்ற மக்கள், மீண்டும் கொழும்பிற்கு திரும்புவதற்காக விசேட போக்குவரத்து சேவைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.

இந்த சேவைகள் எதிர்வரும் ஜனவரி மாதம் 2ஆம் திகதி முன்னெடுக்கப்படும் என இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் லலித் டி அல்விஸ் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை, கொழும்பு கோட்டையிலிருந்து பதுளைக்கு இன்று காலை 7.30 இற்கு விசேட ரயில் சேவையும் பதுளையிலிருந்து கொழும்பு கோட்டைக்கு நாளை காலை 7.45 இற்கு விசேட ரயில் சேவையும் முன்னெடுக்கப்படவுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version