ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் – தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் அறிவிப்பு..!

அடுத்த வருடம் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் தாம் போட்டியிடப் போவதாக எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அறிவிக்கவில்லையென தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், அனைத்து கட்சிகளிடம் இருந்தும் கோரிக்கைகள் கிடைக்கப்பெறுமாயின், தாம் போட்டியிட தயார் என தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் தலைவர் சி.வி விக்னேஸ்வரன் குறிப்பிட்டுள்ளார்.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version