ரயில் தடம்புரள்வு காரணமாக மலையக மார்க்கத்திலான ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பதுளையிலிருந்து கொழும்பு – கோட்டை நோக்கி பயணித்த ரயிலொன்று கிரேட்வெஸ்டன் பகுதியில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் மலையக மார்க்கத்திலான சில ரயில் சேவைகளை இரத்து செய்ய வேண்டியேற்படுமென ரயில்வே போக்குவரத்து அத்தியட்சகர் N.J. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.