ஜோர்தானில் உள்ள இலங்கை பணியாளர்கள் மீது கண்ணீர் புகை பிரயோகம்!

ஜோர்தானில் உள்ள இலங்கை பணியாளர்கள் குழுவொன்றின் வீசா காலம் நிறைவடைந்துள்ள போதிலும் பணிபுரிய நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது அந்த நாட்டு பொலிஸார் கண்ணீர் புகை பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது காயமடைந்த நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பில் அரசாங்கம் மற்றும் இலங்கை தூதரகம் எதுவித நடவடிக்கையும் மேற்கொள்ளாமையினால் போராட்டத்தில் ஈடுபட்டதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போராட்டத்திற்கு பின்னர் விடுதிகளிலிருந்து ஆண்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் பெண்களும் வெளியேற்றப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version