போக்குவரத்து விதிமீறல்கள் சிசிடிவி கெமராக்கள் ஊடாக கண்காணிப்பு..!

கொழும்பு பிரதேசத்தில் போக்குவரத்து விதிமீறல்களை மேற்கொள்ளும் சாரதிகளை சிசிடிவி கெமராக்கள் மூலம் அடையாளம் காணும் விசேட வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன்படி இன்று முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை கொழும்பு நகரில் இந்த திட்டமாக நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.

இந்த திட்டத்தின் ஊடாக போக்குவரத்து விதிகளை மீறும் சாரதிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version