நாடளாவிய ரீதியில் பொலிஸார் மேற்கொண்டுள்ள போதைப்பொருள் சுற்றிவளைப்பு நடவடிக்கையில் கடந்த 24 மணித்தியாலங்களில் 818 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதானவர்களில் ஒருவருக்கு தடுப்பு காவல் உத்தரவின் கீழ் விசாரிக்கப்பட்டு வருவதுடன், 8 பேர் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த சோதனை நடவடிக்கையின்போது 159 கிராம் ஹெரோயின், 112 கிராம் ஐஸ் மற்றும் 329 போதை மாத்திரைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.