இலங்கை வந்தடைந்தார் தாய்லாந்து பிரதமர்!

தாய்லாந்து பிரதமர் Srettha Thavisin உத்தியோகபூர்வ விஜயமாக இன்று (02.02) கட்டுநாயக்க விமான நிலையத்தின் ஊடாக இலங்கை வந்தடைந்துள்ளார்.

கொழும்பு காலிமுகத்திடலில் நாளை நடைபெறவுள்ள இலங்கை 76 வது தேசிய சுதந்திர தின விழாவில் பிரதம அதிதியாக கலந்துக்கொள்ளும் நோக்கிலேயே இவர் இலங்கை வந்துள்ளார்.

தாய்லாந்து பிரதமர் ஸ்ரேத்தா தவிசின் தலைமையிலான குழுவினரை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி அலுவலகத்தில் சம்பிரதாயபூர்வமாக வரவேற்றதாக ஜனாதிபதி ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

தாய்லாந்து பிரதமரின் இந்த விஜயத்தின் போது, இலங்கை-தாய்லாந்து இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை, இலங்கை மணிக்கக்கல், ஆபரண ஆராய்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு உடன்படிக்கை என்பன கைச்சாத்திடப்பட உள்ளன.

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version