ரணில் விக்ரமசிங்கவே திருடர்களின் சொத்துக்களை பாதுகாக்கின்றார் – சஜித் விசனம். 

நாட்டில் வங்குரோத்து நிலைக்கு காரணமானவர்களிடமிருந்து, நாட்டு மக்களுக்கு நட்ட ஈடு பெறுவதற்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவே  தடையாக இருப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். 

ஜனாதிபதி பாராளுமன்றத்தில் இன்று(06) ஆற்றிய உரைக்கு பதில் உரை நிகழ்ந்தும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு பேரழிவை உருவாக்கியவர்களின் சொத்துக்களையும் ஜனாதிபதியே பாதுகாத்து வருவதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

ஜனாதிபதி இத்தகைய திருடர்களை நம்பியே ஆட்சியை நடத்தி வருவதாகவும் அவர்  தெரிவித்துள்ளார்.

ராஜபக்‌ஷவினர் உருவாக்கிய வங்குரோத்து நிலையை ரணில் ராஜபக்ச அரசாங்கம் மேலும் விரிவுபடுத்தி மக்களின் வாழ்வை தொடர்ந்தும் சீரழித்து வருவதாகவும் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியுள்ளார். 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version