ஞானசார தேரருக்கு கடூழிய சிறைத் தண்டனை..! 

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலபொட அத்தே ஞானசார தேரருக்கு நான்கு வருட கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குருணாகல் விகாரையில் இஸ்லாமிய மதத்திற்கு எதிராக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் தொடுக்கப்பட்ட வழக்கில், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆதித்ய படபெந்திகேவினால் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

கடூழிய சிறை தண்டனைக்கு மேலதிகமாக, ஞானசார தேரருக்கு 100,000 ரூபா அபராதம் செலுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 30 ஆம் திகதி  குருணாகல் விகாரையில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது, மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பில் சட்டமா அதிபரினால் ஞானசார தேரருக்கு எதிராக வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. 

Social Share

Leave a Reply Cancel reply

Exit mobile version