2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தர பரீட்சை பெறுபேறுகளை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த அறிவித்துள்ளார்.
இதன்படி, பெறுபேறுகள் அடுத்த மாதம் முதல் வாரத்தில் வெளியிடப்படும் என அமைச்சர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
இதேவேளை, கல்விப் பொதுத்தராதர சாதாரணதர பரீட்சையை அடுத்த மாதம் நடுப்பகுதியில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.