பயணிகளின் வசதி கருதி விசேட பஸ் மற்றும் ரயில் சேவைகள்

பண்டிகையை முன்னிட்டு சொந்த ஊர்களுக்கு சென்றவர்கள் மீண்டும் திரும்புவதற்கு இன்று (15) மற்றும் நாளை (16) விசேட பஸ் சேவைகள் இயக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

பயணிகளின் தேவைக்கேற்ப பஸ்களை சேவையில் ஈடுபடுத்துவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, பயணிகளின் வசதி கருதி விசேட ரயில் சேவைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்கள பிரதிப் பொது முகாமையாளர் என்.ஜே. இந்திபொலகே தெரிவித்துள்ளார்.

Social Share

Leave a Reply