Jaffna Gladiators அணி அபார வெற்றி..!

ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுசரணையுடன் கிரிக்கெட்டை மேம்படுத்தும் நோக்கில் வடமாகாண கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்படும் வட மாகாணத்தின் மாபெரும் கிரிக்கெட் தொடரின் 3வது போட்டியில் Jaffna Gladiators அணி வெற்றி பெற்றுள்ளது. 

வவுனியா நகரசபை மைதானத்தில் நேற்று(28.04) நடைபெற்ற போட்டியில் Jaffna Gladiators மற்றும் Mannar Kings அணிகள் பலப்பரீட்சை நடத்தியிருந்தன. 

போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற Mannar Kings அணி களத்தடுப்பை தெரிவு செய்தது. 

அதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Gladiators அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்பிற்கு 175 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. 

Jaffna Gladiators அணி சார்பில் இ டிலக்‌ஷன் 44 ஓட்டங்களையும், எஸ் அஜித் 28 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். 

Mannar Kings அணி சார்பில் பந்துவீச்சில் எட்வர்ட் குலாஸ் 3 விக்கெட்டுகளையும், ரூட் டேனியல், எம் திலீபன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர். 

176 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய Mannar Kings அணி 18 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 107 ஓட்டங்களை மாத்திரம் பெற்றுக்கொண்டது. 

Mannar Kings அணி சார்பில் வி மில்டன் 28 ஓட்டங்களை பெற்றுக்கொண்டனர். 

Jaffna Gladiators அணி சார்பில் பந்துவீச்சில் ஜனந்தன், எஸ் கஜனன், எஸ் அஜித் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். 

இதன்படி, இந்த போட்டியில்  Jaffna Gladiators அணி 68 ஓட்டங்களினால் அபார வெற்றியீட்டியதுடன் போட்டியின் ஆட்ட நாயகனாக Jaffna Gladiators அணியின் எஸ் அஜித் தெரிவு செய்யப்பட்டார். 

Social Share

Leave a Reply