‘பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும்’ – சஷீந்திர MP

இந்தியாவில் இருந்து நானோ நைட்ரஜன் திரவ உரத்தை இறக்குமதி செய்யும் போது ஏதேனும் நிதி முறைகேடு இடம்பெற்றதா என்பது குறித்து பக்கச்சார்பற்ற விசாரணை நடத்துமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ தெரிவித்துள்ளார் .

நானோ திரவ உரங்களை இறக்குமதி செய்வது விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகத்தின் பரிந்துரை மற்றும் மேற்பார்வையுடன் முறையான கொள்முதல் செயல்முறை மூலமே மேற்கொள்ளப்பட்டதாகவும் அவர் பாராளுமன்றத்தில் இனதெரிவித்தார்.

உர இறக்குமதியின் பின்னணியில் மோசடியில் ஈடுபட்டதாக ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் ரோகினி குமாரி கவிரத்ன பாராளுமன்றத்தில் தெரிவித்ததாகவும், அந்த நடவடிக்கையில் தான் தலையிடவில்லை என்றும், எந்த விசாரணையையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

‘பக்கச்சார்பற்ற விசாரணை நடத்தப்படும்' - சஷீந்திர MP
Social Share
FacebookTwitterLinkedinWhatsappInstagramViberTelegramFacebook MessengerGmailPinboardSkype
FacebookTwitterRedditLinkedinPinterestMeWeMixWhatsapp

Leave a Reply Cancel reply

Exit mobile version