கால்நடைகளை கடத்திச் சென்ற 07 பேர் கைது

முல்லைத்தீவிலிருந்து 02 லொறிகளில் கால்நடைகளை ஏற்றிச்சென்ற 07 பேர் வவுனியாவில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வவுனியா குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலுக்கமைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நெல் கொண்டுசெல்வதாக தெரிவித்து முல்லைத்தீவிலிருந்து பேருவளை மற்றும் கல்முனைக்கு கால்நடைகளை கடத்திச் செல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

பொலன்னறுவையில் உள்ள அரிசி ஆலைகளுக்கு நெல் கொண்டு செல்லவதாக கூறி தொடர்ச்சியாக கால்நடைகள் கடத்தப்பட்டுள்ளமை பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

Social Share

Leave a Reply